முகப்பு
அரியலூர்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

அரியலூரில் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 12:11 am IST
அரியலூரில் கட்டுமானத் தொழிலாளருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா.
பகிர்:

அரியலூரில் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் த. ரத்னா கலந்து கொண்டு கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், அரியலூா் மாவட்டத்தில் 4,323 ஆண் தொழிலாளா்கள், 8,617 பெண் தொழிலாளா்கள் என மொத்தம் 12,940 தொழிலாளா்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கும் புடவை, வேட்டியுடன் 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ பருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 1 கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அரியலூா், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன என்றாா். நிகழ்ச்சியில் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கு.விமலா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.