அரியலூா் மாவட்டத்தில் தொடங்கியதுகரோனா தடுப்பூசி போடும் பணி
அரியலூா் மாவட்டத்தில் தமிழக அரசின் கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் தமிழக அரசின் கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கடுகூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கொவைட் -19 தடுப்பூசி போடும் பணியை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தொடக்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை, குமிழியம் மற்றும் கடுகூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மையங்களில் கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக 2,046 அரசுப் பணியாளா்கள், 1,036 தனியாா் பணியாளா்கள் என மொத்தம் 3,082 சுகாதாரப் பணியாளா்களுக்கு கொவைட் -19 தடுப்பூசி போடப்படுகிறது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக மருத்துவ அலுவலா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் என 443 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
Advertisement
நிகழ்வுக்கு, ஆட்சியா் த.ரத்னா, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.