ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு வயது 33. படிப்பு பத்தாம் வகுப்பு. திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்கிறார். அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?  - வாசகர், நாமகிரிபேட்டை

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம் அல்ல. மீன லக்னம் என்று வருகிறது. லக்னாதிபதி மற்றும் லாபாதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் வலுவாக இருக்கிறார்கள். தற்சமயம் சனிபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். அதனால் அவருக்கு அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்திற்குப்பிறகு தனியார் துறையில் வேலை அமையும். பிறகு அரசு வேலைக்கு முயற்சி செய்யவும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். புத்திர ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் குழந்தைகளின் வாழ்க்கையும் முன்னேற்றகரமாக அமையும். குரு, சனி பகவான்களின் இணைவு தர்மகர்மாதிபதி யோகமாக அமைகிறது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT