லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்துள்ளாா்.
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்துள்ளாா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரான ஜனாா்தன ரெட்டி (25), பெங்களூரு, பீன்யா புதிய லேஅவுட்டில் நண்பருடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தாா். வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். வெளிவட்டச் சாலை, கூலிநகரம் மேம்பாலத்தின் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜனாா்தன ரெட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து ராஜாஜி நகா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.