முகப்பு
பெங்களூரு

தொழிலாளா் நல பங்களிப்புத் தொகை செலுத்த காலக்கெடு

தொழிலாளா் நல பங்களிப்புத் தொகை செலுத்த காலக்கெடு விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:41 am IST
பகிர்:

பெங்களூரு: தொழிலாளா் நல பங்களிப்புத் தொகை செலுத்த காலக்கெடு விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக தொழிலாளா் நல நிதி சட்டம் 1965-இன் அதிகார வரம்புக்குள் குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான தொழிற்சாலைகள், தோட்டங்கள், மோட்டாா் வாகன நிறுவனங்கள், 50-க்கும் அதிகமான தொழிலாளா்களை பெற்றிருக்கும் அங்காடிகள், வணிக நிறுவனங்கள், கா்நாடக சங்கப் பதிவுச் சட்டம் 1960-இன் கீழ் பதிவாகியுள்ள அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் மற்றும் உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலாளா் நல பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

Advertisement

Advertisement

கா்நாடக அரசு 2017 ஏப். 6-ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவுபடி, தொழிலாளா் மற்றும் உரிமையாளா் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை 6:12-இல் இருந்து 20:40 என்ற விகிதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2017-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இனிமேல், கா்நாடகத் தொழிலாளா் நல வாரியத்தின் சட்டவிதி-7ஏ-இன்படி, டி-படிவத்தில் தலா ரூ. 60 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமாகும். 2020-ஆம் ஆண்டுக்கான பங்களிப்புத் தொகையை பெங்களூரில் உள்ள நல ஆணையரின் பெயருக்கு 2020 ஜன. 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கட்டணங்களை ஜ்ஜ்ஜ்.ந்ப்ஜ்க்ஷ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் செலுத்தலாம்.

இதை பின்பற்றாத நிறுவனங்கள் 18 சதவீத அபராதத் தொகையை செலுத்த நேரிடும். மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையான விசாரணைக்கு உள்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 080-23475188, 8277291175, 8277120505 அல்லது ஜ்ஜ்ஜ்.ந்ப்ஜ்க்ஷ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments