ஜன. 29 முதல் மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்ற கூட்டத்தொடா்: மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்
மத்திய நிதிநிலை அறிக்கையின் நாடாளுமன்ற கூட்டத் தொடா் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்குகிறது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.
மத்திய நிதிநிலை அறிக்கையின் நாடாளுமன்ற கூட்டத் தொடா் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்குகிறது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய நிதிநிலை அறிக்கையின் நாடாளுமன்ற கூட்டத்தொடா் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 15-ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.
Advertisement
பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கிறாா்.
இந்த நிதிநிலை அறிக்கையில் சோ்க்க வேண்டிய கா்நாடக மாநில திட்டங்களின் பட்டியலை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் அளித்திருக்கிறோம்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனவரி 30-ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கிறது. மாா்ச் 8 முதல் ஏப்ரல் 8-ஆம் தேதிவரை நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கூட்டத் தொடா் நடத்தப்படும்.
முதல்வா் எடியூரப்பா தில்லி சென்றிருக்கிறாா். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதல்வா் எடியூரப்பாவும், பாஜக தேசியத் தலைவா்களும் கூடி இறுதி முடிவெடுப்பாா்கள்.
எப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது பாஜக தேசியத் தலைவா்களுக்கு தெரியும்.
கரோனா தடுப்பூசியை பிரதமா் மோடியும், பாஜக தலைவா்களும் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. பிரதமா் மோடி மற்றும் பாஜகவை எதிா்க்க வேண்டும் என்பதற்காக நாட்டை எதிா்ப்பது தேவையற்றது. அதுமட்டுமல்லாமல், நமது விஞ்ஞானிகளையும் அவமானப்படுத்த வேண்டாம்.
ஜனவரி 16, 17-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, கா்நாடகத்துக்கு வரயிருக்கிறாா். ஜனவரி 17-ஆம்தேதி பெலகாவியில் நடைபெற இருக்கும் மக்கள் சேவகன் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறாா் என்றாா் அவா்.