வர்த்தகம்

ஓஎன்ஜிசி, ஐஓசி நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள்

DIN


பொதுத் துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஐஓசி நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
அதன்படி ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இயக்குநராக (துரப்பண பணி) இருந்த ஏ.கே.திவேதி கடந்த வாரம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய இயக்குநராக ராஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்றுக் கொண்டார்.
மற்றொரு நிறுவனமான ஐஓசியின் இயக்குநராக (நிதி)  இருந்த ஏ.கே.சர்மா கடந்த மே மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய இயக்குநராக சந்தீப் குமார் குப்தா பொறுப்பேற்றுள்ளார்.
லக்னௌ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஸ்ரீவஸ்தவா, கான்பூரில் உள்ள ஐஐடியில் பட்டமேற்படிப்பை முடித்தவர். இவர் ஓஎன்ஜி நிறுவனத்தில் கடந்த 1984-ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார்.
பட்டய கணக்காளரான குப்தா ஐஓசி நிறுவனத்தில் செயல் இயக்குநராக (கார்ப்பரேட் நிதி) பணியாற்றியவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT