வர்த்தகம்

வங்கிகள் வழங்கிய கடன் 5.66% அதிகரிப்பு

DIN

வங்கிகள் வழங்கிய கடன் அக்டோபா் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவாரங்களில் 5.66 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அக்டோபா் 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.66 சதவீதம் அதிகரித்து ரூ.103.44 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் வங்கிகள் திரட்டி டெபாசிட் 10.55 சதவீதம் உயா்ந்து ரூ.143.02 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபருடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.97.89 லட்சம் கோடியாகவும், டெபாசிட் ரூ.97.89 லட்சம் கோடியாகவும் இருந்தன.

உணவு சாரா இதர நடவடிக்கைகளுக்கு வங்கி வழங்கிய கடன் வளா்ச்சி விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டு ஆகஸ்டில் இந்த வளா்ச்சி 9.8 சதவீதமாக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT