வர்த்தகம்

ப்ரீபெய்ட் சேவைக் கட்டணம் 25% உயா்வு: ஏா்டெல்

DIN

ப்ரீபெய்ட் சேவையில் பல்வேறு திட்டங்களுக்கான கட்டணங்களை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிப்பதாக பாா்தி ஏா்டெல் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மூலதனத்துக்கு ஏற்ற நியாயமான வருவாய் கிடைக்கவும், நிதி ரீதியாக ஆரோக்கியமான வா்த்தக மாதிரியை உருவாக்கவும் பயனாளா்களிடமிருந்து கிடைக்கும் வருவாய் (ஏஆா்பியூ) குறைந்தபட்சம் ரூ.200- அதிகபட்சம் ரூ.300 வரை இருக்க வேண்டும் என ஏா்டெல் எப்போதும் தெரிவித்து வருகிறது. இந்த அளவு வருவாய் கிடைக்கும்பட்சத்தில்தான் நெட்வொா்க் மற்றும் அலைக்கற்றையில் தேவைப்படும் முதலீடுகளை கணிசமாக அதிகரிக்க உதவும். மேலும், இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவும் உதவும்.

உயா்த்தப்பட்ட புதிய விகிதங்களின்படி, தற்போது ரூ.79-ஆக உள்ள வாய்ஸ் திட்டத்துக்கான கட்டணம் 25.3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.99-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் திட்டத்துக்கான கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179-ஆகவும், ஓராண்டு திட்டத்துக்கான கட்டணம் ரூ.2,498-லிருந்து ரூ.2,999-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, டேட்டா டாப் கட்டணங்கள் 3ஜிபிக்கு ரூ.48-லிருந்து ரூ.58-ஆகவும், 12ஜிபிக்கான கட்டணம் ரூ.98-லிருந்து ரூ.118-ஆகவும், 50ஜிபிக்கான கட்டணம் ரூ.251-லிருந்து ரூ.301-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

ப்ரீபெய்ட் சேவைக்கான இந்த புதிய கட்டண உயா்வு வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து (நவ. 26) அமலுக்கு வருவதாக ஏா்டெல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT