பந்தன் வங்கி நிகர லாபம் 6 மடங்காக அதிகரிப்பு
தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.317.90 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் ஆறு மடங்காகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.54.62 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வருவாய் ரூ.6,133 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது அதிகம். அப்போது வங்கியின் நிகர வருவாய் ரூ.5,890 கோடியாக இருந்தது.
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் 23.1 சதவீதம் அதிகரித்து 2,745 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.