பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, மார்ச் வரையான காலாண்டில், வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18.67 சதவீதம் உயர்ந்து ரூ. 3,087.76 கோடியாக உள்ளது.
மும்பை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, மார்ச் வரையான காலாண்டில், வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18.67 சதவீதம் உயர்ந்து ரூ. 3,087.76 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், வங்கியின் நிகர லாபம் ரூ. 2,601.98 கோடியாக இருந்தது.
தனி நிறுவனமாக பார்க்கும்போது, வங்கியின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 14.85 சதவீதம் அதிகரித்து ரூ. 3,015.79 கோடியாக உள்ளது.
அறிக்கை செய்யப்பட்ட இந்தக் காலாண்டில், வங்கியின் நிகர வட்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து ரூ. 6,730 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ. 6,063 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
2026 நிதியாண்டின் 3வது காலாண்டில் 2.57 சதவீதமாக இருந்த நிகர வட்டி வரம்பு, 4வது காலாண்டில் 2.58 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், ஆண்டின் அடிப்படையில் பார்க்கும்போது, வட்டி வரம்பு 2.61 சதவீதத்திலிருந்து சற்று குறைந்துள்ளது.
அறிக்கை செய்யப்பட்ட இந்தக் காலாண்டில், வங்கியின் உலகளாவிய வைப்புத்தொகை 13.56 சதவீதம் அதிகரித்து ரூ. 9.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 8.17 லட்சம் கோடியாக இருந்தது.
உள்நாட்டு வைப்புத்தொகை ஆண்டுக்கு ஆண்டு 14.30 சதவீதம் அதிகரித்து ரூ. 8.01 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வெளிநாட்டு வைப்புத்தொகை 9.11 சதவீதம் அதிகரித்து ரூ. 1.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகையானது 7.30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், மார்ச் 2026 நிலவரப்படி, வங்கியின் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதம் 37.64 சதவீதமாகப் பதிவானது.
வெளிநாடுகளில் வழங்கப்பட்ட கடன் தொகை 14.25 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 1.17 லட்சம் கோடியை எட்டியது.
Bank of India reported an 18.67 per cent rise in its consolidated net profit for the March quarter to Rs 3,087.76 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.