ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மார்ச் காலாண்டில் தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் 118.53 சதவீதம் அதிகரித்து, ரூ. 404.60 கோடியாகப் இருப்பதாக அறிவித்தது.
புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மார்ச் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 118.53 சதவீதம் அதிகரித்து ரூ. 404.60 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு 4வது காலாண்டில், நிறுவனம் ரூ. 185.14 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
அரசுக்குச் சொந்தமான இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ. 1,400.55 கோடியிலிருந்து ரூ. 1,659.75 கோடியாக உயர்ந்த நிலையில், நிறுவனத்தின் செலவு ரூ. 1,242 கோடியிலிருந்து ரூ. 1,235.51 கோடியாகக் குறைந்துள்ளது.
Advertisement
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, பங்குக்கு ஒன்றுக்கு ரூ. 1 வீதம் இறுதி ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.