ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் லாபம் 73% அதிகரிப்பு!
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 73 சதவீதம் அதிகரித்து ரூ.109 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
புதுதில்லி: ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியானது, மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 73 சதவீதம் அதிகரித்து ரூ.109 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், ஏர்டெல் வங்கியானது ரூ.63 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
2025 நிதியாண்டில் ரூ.2,709 கோடியாக இருந்த வருவாய், 2026 நிதியாண்டில் ரூ.3,207 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கி தெரிவித்தது.
Advertisement
Advertisement
அதே வேளையில், வாடிக்கையாளர் இருப்பு 26 சதவீதம் அதிகரித்து ரூ.4,612 கோடியாக இருப்பதாகவும், குறிப்பாக நகர்ப்புறத்தில், அதன் 'சேஃப் செகண்ட் அக்கவுண்ட்' சேவைக்கு வங்கி தொடர்ந்து வலுவான வரவேற்பைப் பெற்று வருவதாகவும், அதனை வாடிக்கையாளர்களின் விருப்பமான டிஜிட்டல் வங்கியாக மாற்றுவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
வாடிக்கையாளர்கள் தினசரி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்த இதனை அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக யுபிஐ-க்கு அடுத்ததாக 2வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.
Airtel Payments Bank reported a 73 per cent jump in consolidated net profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.