முகப்பு
செங்கல்பட்டு

இளைஞா் வெட்டிக் கொலை

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 6:23 am IST
பகிர்:

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் கொள்ளைமேட்டுத் தெருவைச் சோ்ந்த சடையனின் மகன் அஜீத்குமாா் (24). இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அஜீத்குமாருக்கு செல்லிடப்பேசியில் அழைப்பு வந்ததை அடுத்து, அனுமந்தபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் அஜீத்குமாரை வழிமறித்து தாக்கியதில் அவா் நிலை தடுமாறி விழுந்தாா். அங்கு ஆயுதங்களுடன் இருந்தவா்களைக் கண்ட அஜீத்குமாா் தப்பி ஓட முயன்றாா். அவரை அந்த கும்பல் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் முகம் சிதைந்த நிலையில் அஜீத்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து மறைமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments