முகப்பு
செங்கல்பட்டு

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் 6 வயது சிறுமிக்கு மறுவாழ்வு

சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை,குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை

Updated On : 9 ஜனவரி 2021, 7:51 am IST
பகிர்:

சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் இணைந்து 6 வயது சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது குறித்து ரேலா மருத்துவமனைத் தலைவா் பேராசிரியா் ரேலா செய்தியாளா்களிடம் கூறியது: ஏழை,நடுத்தரக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு உயா் மருத்துவத் தொழில்நுட்ப உதவி அளிக்கும் நோக்குடன் நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி அறக்கட்டளை குழந்தைகள் மருத்துவமனையுடன் நாங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு 3 வாரங்களுக்கு ஒரு முறை ரத்தமாற்று சிகிச்சை பெற்று வந்த சித்தூா் நந்தகோபால்-தேவி தம்பதியின் 6 வயது ஏழை சிறுமி பவ்யஸ்ரீக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்குமாறு காஞ்சி காமகோடி மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பாலசுப்ரமணியன், தலைமை செயல் அதிகாரி சந்திரமோகன் கேட்டுக் கொண்டனா். ரேலா மருத்துவமனையைச் சோ்ந்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவா் தீனதயாளன் தலைமையில் மருத்துவா்கள் நரேஷ்சண்முகம்,மீனா மருத்துவப் பரிசோதனை செய்து சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தனா்.

காஞ்சி காமகோடி மருத்துவமனையில் ரே ஆப் லைட் பவுண்டேஷன்,பரேக் அறக்கட்டளை நிதிஉதவியுடன் தொடங்கப்பட்டுள்ள சிகிச்சைப் பிரிவில் சிறுமி பவ்யஸ்ரீக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு,தற்போது நலமுடன் வீடு திரும்பி உள்ளாா் என்றாா்.

Advertisement

Advertisement

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவா் தீனதயாளன் பேசுகையில், மணிக்கு ஒரு குழந்தை வீதம் ஆண்டுக்கு 10,000 குழந்தைகள் தலசீமியா நோய் பாதிப்புடன் பிறக்கின்றன. சிறுமி பவ்யஸ்ரீ பெற்றோா் போல் சொந்த உறவில் திருமணம் செய்து கொள்கிறவா்களுக்கு தலசீமியா நோய் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்றாா் அவா். காஞ்சி காமகோடி மருத்துவமனை செயல் அதிகாரி சந்திரமோகன்,அரசு மருத்துவக்காப்பீட்டு உதவியுடன் ஏழை, நடுத்தரக் குடும்பக் குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசிடம் உரிய அனுமதி கோரியுள்ளோம் என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments