முகப்பு
சென்னை

மாடியில் இருந்து விழுந்த தனியார் நிறுவன மேலாளர் சாவு

சென்னை மாங்காடு அருகே மாடியில் இருந்து விழுந்த தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.

Updated On : 2 மே, 2013 at 5:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

சென்னை மாங்காடு அருகே மாடியில் இருந்து விழுந்த தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.

மாங்காடு பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் பாலு (32). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்றுக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த பாலு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.