முகப்பு
தமிழ்நாடு

அதிகரிக்கும் மின்தடை: முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

மின்தடை தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவது தொடர்பாக...

Updated On : 16 ஜூன் 2026, 11:12 am IST
முதல்வர் விஜய் - டிஐபிஆர்
பகிர்:

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ள சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கோடைக்காலத்தில் மின்தேவையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

இரவு-பகலாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Advertisement

Advertisement

குறைந்த மின்அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்தச் சூழலில், முதல்வர் விஜய் மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

summary

Chief Minister Vijay is holding consultations with electricity department officials.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.