ரயில்வே அதிகாரி வீட்டில் திருட்டு
சென்னை கொளத்தூரில் ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ. 1.6 லட்சம் திருடப்பட்டது.
சென்னை கொளத்தூரில் ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ. 1.6 லட்சம் திருடப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கொளத்தூர் பாபா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவர் ஐ.சி.எப். ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மகள்கள் யுவராணி, கஸ்தூரி. யுவராணி அழகு நிலையத்தில் பணியாற்றுகிறார். கஸ்தூரி கல்லூரியில் படித்து வருகிறார்.
விஜயராகவன் தனது மனைவியுடன் 2 நாள்களுக்கு முன் தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மகள்கள் மட்டும் இருந்துள்ளனர்.
Advertisement
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு யுவராணி வேலைக்கும், கஸ்தூரி கல்லூரிக்கும் சென்று விட்டனர். மாலையில் யுவராணி வீட்டுக்கு வந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் பீரோவை உடைத்து பணம் எடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
யுவராணியைப் பார்த்ததும் அந்த மர்ம நபர், ஏற்கனவே உடைத்து வந்திருந்த பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடி விட்டார். பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த ரூ 1.6 லட்சம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்
தார்.
இது குறித்து ராஜாமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.