முகப்பு
சென்னை

சென்னையில் ரூ. 50 லட்சம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்: 6 பேர் கைது

சென்னை பாரிமுனையில் திருட்டு சி.டி.க்கள் தயாரித்த 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 2 ஜூன், 2013 at 3:24 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

சென்னை பாரிமுனையில் திருட்டு சி.டி.க்கள் தயாரித்த 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்தி:

சென்னை பாரிமுனை மலையபெருமாள் தெருவில் உள்ள ஒரு கடையில் போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர். அந்தக் கடையின் முகப்பில் வாழை இலைக் கடை இருந்தது. வெளியில் இருந்து பார்க்கும்போது அது வாழை இலைக் கடை போன்றுதான் தெரிந்தது.

Advertisement

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று சோதனை செய்தபோது ஏராளமான ஆபாச சி.டி.க்கள் மற்றும் புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் இருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அந்த சி.டி.க்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சி.டி. தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினிகள், இயந்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக சிவகுமார் (36), மாரிமுத்து, கார்த்திக் (31), சந்தோஷ் (29), தமீமுன் அன்சாரி (26), கட்டடத்தின் உரிமையாளர் தரணி (54) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்த சி.டி.க்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.