அதிமுக பெண் நிர்வாகிகள் இருவர் நீக்கம்
அதிமுகவில் இருந்து இரண்டு பெண் நிர்வாகிகளை நீக்கி முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து இரண்டு பெண் நிர்வாகிகளை நீக்கி முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
கரூர் மாவட்டம் குளித்தலை நகரின் கே.பிச்சையம்மாள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் பி.முனியம்மாள் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
Advertisement
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்ட காரணத்தாலும் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.