முகப்பு
சென்னை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் போதை தடுப்புப் பிரிவு தொடக்கம்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புகையிலை, போதை தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 4:37 am IST
பகிர்:

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புகையிலை, போதை தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் உளவியல் துறையின் 50 ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்த பிரிவு செயல்படும். புகை, போதை பழக்கவழக்கங்களில் சிக்கி அதிலிருந்து மீள விரும்புவோர் இங்கு சிகிச்சைக்குச் செல்லலாம். சிகிச்சைக்கு செல்லும் வெளி நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சைகள் போன்றவை வழங்கப்படும்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.ராமகிருஷ்ணன் கூறியது: புகை, போதை பழக்கவழக்கங்களால் புற்றுநோய் அல்லாத நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படும். புகை, போதை பொருள்களில் உள்ள நிகோடின் வேதிப்பொருள்தான் உடலில் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குகிறது. எனவே நிகோடின் உபயோகத்தை குறைக்கக் கூறி நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.