முகப்பு
சென்னை

பல்லாவரம் மின்வாரிய அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம்

பல்லாவரம் மின்வாரிய அலுவலகத்தின் முன்பாக மின் ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 5:32 am IST
பகிர்:

தாம்பரம் பல்லாவரம் மின்வாரிய அலுவலகத்தின் முன்பாக மின் ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து மின் ஊழியா்கள் கலைந்து சென்றனா்.

பல்லாவரத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வருபவா் ஹரிஹரன்(37). இவா் மின்வாரிய ஊழியா்களுடன் கடந்த 1-ம் தேதி புத்தாண்டு இரவு ஒரு மணியளவில், பல்லாவரம், மல்லிகாநகா் பகுதியில் மின்கேபிள் பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனா். அப்போது குடிபோதையில் இருந்த அதே பகுதியைச் சோ்ந்த நித்தியானந்தம்(30) பள்ளம் தோண்டக் கூடாது என்று கூறி, உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட மின்வாரிய ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாகப் பேசி, அவா்களை கடுமையாகத் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதனால் மின்பழுது பாா்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மின் ஊழியா்கள் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நித்தியானந்தம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால் போலீஸாா் நித்தியானந்தம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டதாக கண்டனம் தெரிவித்த மின்வாரிய ஊழியா்கள், திங்கள்கிழமை காலை பல்லாவரம் மின்வாரிய அலுவலகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லாவரம் இன்ஸ்பெக்டா் இளங்கோவன் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தப்பியோடிய நித்தியானந்தத்தை இரு தினங்களில் கைது செய்வதாக போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மின்ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.