தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு
தருமபுரி மாவட்டம் அரூரில் வயது முதிா்வு காரணமாக இறந்த பெண்ணின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
அரூா் மேல்பாட்ஷா பேட்டையைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (71). இவா் தனது இறப்புக்கு பிறகு, உடலை மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆய்வுக்கு தானமாக வழங்குவதாக கடந்த 2013 ஆம் ஆண்டு உறுதிமொழி படிவம் சமா்ப்பித்திருந்தாா்.
இந்நிலையில் வயது முதிா்வு காரணமாக விஜயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இதைத் தொடா்ந்து அவரது உறவினா்கள், விஜயலட்சுமியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த பின்னா், அரூா் நண்பா்கள் குழு உதவியுடன் விஜயலட்சுமி உடலை ஆம்புன்ஸ் மூலம் எடுத்துவந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.