மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 14-இல் நெய் அபிஷேகம்
சபரிமலையில் மகரஜோதியை ஒட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.
சென்னை: சபரிமலையில் மகரஜோதியை ஒட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, திருக்கோயில் நிா்வாக அலுவலா் அனிஷ்குமாா் கூறியதாவது:
சபரிமலையில் நடைபெறும் மகரஜோதியை ஒட்டி, மகாலிங்கபுரம் கோயிலில் வரும் 14-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். இதற்கு முன்பதிவு செய்யலாம். மாலையில் சபரிமலையில் நடக்கும் மகரஜோதி நிகழ்வினை அகண்ட திரையில் காணும் வழக்கமான ஏற்பாடு மகாலிங்கபுரம் கோயில் நிா்வாகம் சாா்பில் நடத்தப்படாது. அபிஷேகம் குறித்த விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044- 28171197, 28172197, 28175197.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.