முகப்பு
செய்திகள்

3-வது குழந்தைக்குத் தந்தையானார் இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 4:32 pm IST
பகிர்:

இயக்குநர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல இயக்குநர் செல்வராகவன், 2011-ல் கீதாஞ்சலியைத் திருமணம் செய்தார். 2012-ல் லீலாவதி என்கிற மகளும் 2013-ல் ஓம்கார் என்கிற மகனும் பிறந்தார்கள். மாலை நேரத்து மயக்கம் என்கிற படத்தை கீதாஞ்சலி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் 3-வது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். குழந்தைக்கு ரிஷிகேஷ் எனப் பெயரிட்டுள்ளதாக இன்ஸ்டகிராமில் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். குழந்தை நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா. இப்படத்தின் புகைப்படப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை செல்வராகவனும் தாணுவும் வெளியிட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments