முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கும் செந்தில்
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்.
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக 80, 90களில் திகழ்ந்தவர் செந்தில். கவுண்டமணி - செந்தில் ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்து மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளை அளித்துள்ளார்கள்.
இந்நிலையில் இத்தனை வருடங்கள் கழித்து முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கவுள்ளார் செந்தில். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்து இயக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை என்கிற படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இப்படத்தைத் தயாரித்த சமீர் பரத்ராம், செந்தில் நடிக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.