முகப்பு
செய்திகள்

பிரபாஸின் சாஹூ திரைப்பட ஹீரோயின் இவர் தானாம்?!

ஆஷிக் 2 திரைப்படப் புகழ் ஷ்ரத்தா கபூர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய அத்தையின் பெயர் என்ன தெரியுமா? பத்மினி கோலாப்புரி

Updated On : 2 ஆகஸ்ட் 2017, 5:57 pm IST
பகிர்:

பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் சாஹூ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கதை நிகழ்வது பெரும்பாலும் வளைகுடா நாடுகளில்  என்பதால் பஹ்ரைன், துபாய் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அதில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நடிகை குறித்த யூகங்கள் டோலிவுட்டில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன. முதலில் அனுஷ்கா ஷெட்டி என்றார்கள், பின்னர் காத்ரினா கைஃப் என்றார்கள்.

அலியா பட், பரினிதி சோப்ராவின் பெயர்கள் கூட அடிபட்டன. சிலர்  ஷ்ரத்தா கபூர் என்று கூட சொன்னார்கள். முதலில் இதை மறுத்தார் ஷ்ரத்தா கபூர். அவருடைய பாலிவுட் வாய்ப்புகளை விட்டுக் கொடுத்து விட்டு இதில் நடிக்க அவருக்குப் போதுமான தேதிகள் இல்லாமலிருந்த காரணத்தால் ஷ்ரத்தா முதலில் இந்த வாய்ப்பை மறுத்தது உண்மை தான். ஆனால் இப்போது சாஹூவின் நாயகியாக மீண்டும் ஷ்ரத்தா கபூரின் பெயர் தான் அடிபடுகிறது. அவர் தான் சாஹூவில் பாகுபலியின் ஜோடி. அது மட்டுமல்ல டோலிவுட்டில் இது ஷ்ரத்தா கபூரின் முதல் எண்ட்ரியும் கூட!

ஆஷிக் 2 திரைப்படப் புகழ் ஷ்ரத்தா கபூர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய அத்தையின் பெயர் என்ன தெரியுமா? பத்மினி கோலாப்புரி. மறுமகளைப் போலவே அத்தைக்கும் அந்தக் காலத்தில் மொழி பேதமின்றி நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments