
பிரபுதேவா, ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘குலேபகாவலி’. ‘குலேபகாவலி’ படக்குழுவினர், இந்தப் படத்தின் ஆடை அழகியலில் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பதாகக் கூறும் பிரபுதேவா, பாகுபலி 1 & 2 திரைப்படங்களில் அவர்கள் பயன்படுத்திய ஆடை அழகியல் முறையை மிகவும் சிலாகிக்கிறார். இந்தியா சினிமாவின் பெஞ்ச் மார்க் ஆகக் கருதப்படும் பாகுபலியின் ஆடை அழகியல் காட்சிகளில் 15 % காட்சிகள் குலேபகாவலியில் இருந்தாலும் போதும், படம் வென்று விட்டதாக அர்த்தம் என்கிறார் பிரபுதேவா. குலேபகாவலியின் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளுக்காக மட்டுமே 3 மாதங்களுக்கும் அதிகமான உழைப்பைச் செலவிட்டுள்ளதாகக் கூறும் பிரபுதேவா நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றம் தராது என்கிறார்.
சக இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பஞ்சமின்றிப் புகழும் பிரபு தேவா இதற்கு முன்பு அவரோடு ’ ‘ரவுடி ரத்தோர்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் மிக சந்தோஷமாக அந்த வாய்ப்பை ஒப்புக் கொள்ளப்போவதாகவும் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா, ஹன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் ’ ‘குலேபகாவலி’ திரைப்படத்தை கல்யாண் இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...