டிரெய்லர்களை ரசிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை: காவிரி, தூத்துக்குடி பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க விவேக் கோரிக்கை!
காவிரி, தூத்துக்குடி பிரச்னைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், எனவே புதிய டிரெய்லர்களை வெளியிட வேண்டாம் என...
காவிரி, தூத்துக்குடி பிரச்னைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், எனவே புதிய டிரெய்லர்களை வெளியிட வேண்டாம் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:
அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள். மக்கள் அதை ரசிக்கும் மன நிலையில் இல்லை. கவனச் சிதறல் வேண்டாம். காவிரி, தூத்துக்குடி - இவையே நம் முன்னுரிமை. அன்பு அறவழி ஆனால் கொள்கையில் திண்மை! கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே. காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.