செய்திகள்

''நேரில் வந்து பேசுங்கடா'' - ரசிகரின் கருத்துக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி

DIN

இயக்குநர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி 'சென்னை 28' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த அவர், 'பண்டிகை' பட இயக்குநர் ஃபெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

அவர்களுக்கு நிலன் என்ற ஆண் குழந்தையுள்ளது. இதனையடுத்து விஜயலட்சுமி தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தனது மகனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் தாயுக்கும் மகனுக்கும் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் அந்த படம் மிகவும் அழகாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் ஒரு சிலர் அந்த புகைப்படத்தைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தனர். 

இதனையடுத்து கோபமான விஜயலட்சுமி, அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், ''குழந்தைகளிடம் செய்ய வேண்டியது என விவரங்கள் வைத்திருக்கிறாயா ? இதனைப் பார்த்ததும் பல்பு எரிகிறதா நேரில் வந்து பேசுங்கள். அழுக்கு ஜென்மங்கள். இதுல அப்பாடக்கர் மாதிரி பதிவு வேறு. இதுகுறித்து விவாதிக்க இன்னொரு எச்ச.'' என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT