''எனக்கு கதாநாயகியாகும் ஆசையில்லை'': பிக்பாஸில் பவானி உருக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவிடம் பவானி உருக்கமாக பேசும் ப்ரமோ விடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை இசைவாணியிடம் பேசிக்கொண்டிருந்தார் பவானி ரெட்டி. அப்போது இசைவாணி, பவானியிடம் உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த பவானி, ஆகிவிட்டது. ஆனால் என் கணவர் இறந்துவிட்டார். அவர் இறந்தபொழுது எனக்கு அழுகை வரவில்லை. நான் அதிர்ச்சியைடைந்தேன். என்று உருக்கமாக பேசினார். அவருக்கு இசைவாணி ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரமோவில் மதுமிதாவும் பவானியும் பேசிக்கொள்கின்றனர். அப்போது அழுதபடியே பேசும், நான் அவரையே (கணவரை) தான் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு திரைப்பட கதாநாயகியாக வேண்டும் என்ற பெரிய ஆசையெல்லாம் இல்லை.
Advertisement
Advertisement
சாகும் வரை ஏதொவொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அழுகிறார். அப்போது அங்கே வரும் பிரியங்கா, எதற்கு இப்பொழுது அழுகிறாய் ? என்று கேட்க, அவரிடம் ஆந்திரா சாப்பாடு வேண்டும் என்று சமாளிக்கிறார். பின்னர் பிரியங்கா, பவானியிடம் நகைச்சுவையாக பேசி அவரை தேற்றுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.