மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கௌதம் கார்த்திக்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் இன்று காலை நடைபெற்றது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் இன்று காலை நடைபெற்றது.
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். மணிரத்தனம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கெளதம்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா. கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. இதனை இருவரும் சமீபத்தில் ஒப்புக் கொண்டனர்.
இதையும் படிக்க | பாபா மறுவெளியீடு: டப்பிங் பணிகளை முடித்தார் ரஜினி!
இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்புடன் மிக எளிமையாக இருவரும் இன்று காலை திருமணம் செய்து கொண்டனர்.
கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா ஜோடிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.