முகப்பு
செய்திகள்

''இனி இதெல்லாம் இல்ல'' - நடிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம்

தேவையில்லாத செலவுகள் அதிகரித்திருப்பதாகக் கூறி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது. 

Updated On : 2 செப்டம்பர் 2022, 11:50 am IST
பகிர்:

தேவையில்லாத செலவுகள் அதிகரித்திருப்பதாகக் கூறி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களில் ஓடிடியில் வெளியாவதால் படத்தின் வசூல் பாதிப்பதாக கூறி தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவகை்கப்பட்டது. 

அப்பொழுது சில முக்கிய முடிவுகளை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், 

Advertisement

Advertisement

  • இனிமேல் நடிகர்களுக்கும்  தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நாள் சம்பளம் கிடையாது.
  • நடிகர்களின் ஊதியத்தில் அவர்களுக்கான பணியாளர்கள், பயண செலவு, தங்குமிடம், சிறப்பு உணவுகள் ஆகியவை அடங்கும். மேற்சொன்னவைகளுக்காக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூடுதலாக செலவு செய்யமுடியாது. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இது பொருந்தும். 
  • நடிகர்களுடனான ஒப்பந்தத்தில் ஊதிய விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 
  • நடிகர்கள் ஒப்பந்த படி சரியான நேரத்தில் படப்பிடப்பில் கலந்துகொள்ள வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு தினசரி தகவல் தரவேண்டும். 
  • படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது ஓடிடி குறித்த விவரங்கள் இடம்பெறாது. 
  • படங்கள் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தபட்சம் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகவேண்டும் போன்ற முடிவுகளை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.

மேற்சொன்ன அனைத்தும் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments