வெற்றிமாறனின் ‘விடுதலை’: 2 பாகங்களாக வெளியாகிறது!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகியுள்ளது.
’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார்.
வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Advertisement
தற்போது வெற்றி மாறனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகியுள்ளது.