ஜெயிலர் ரஜினியின் மருமகள்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை மிர்ணா!
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மிர்ணா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மோகன்லாலுடன் பிக் பிரதர் எனும் மலையாளப் படத்தில் முதன்முறையாக அறிமுகமானார் நடிகை மிர்ணா மேனன். தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
புர்கா எனும் திரைப்படத்தில் நஜ்மா எனும் முஸ்லீம் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ஆதரவினையும் விமர்சனங்களையும் சந்தித்தார். அனந்தம் எனும் இணையத்தொடரிலும் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: 5வது முறையாக இணைந்த மோகன்லால்- ஜீத்து ஜோசப்: ரசிகர்கள் ஆரவாரம்!
இதையும் படிக்க: நடிகர் தனுஷுடன் கூட்டணி எப்போது?: நெல்சன் கூறிய அப்டேட்!
சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக ஸ்வேதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படத்ட்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. இதில் நடித்த மிர்ணாவுக்கு மீம்ஸ் கிர்யேட்டர்கள் சமூக ஊடகங்களில் பல ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.
உங்களை பொண்ணு கேட்டு வரவா என மீம்ஸ்கள் இணையத்தில் அதிகமாக தென்பட்டன. “பெரிய டைனோஸர் பார்த்தா மட்டும்தான் பயம். மத்தபடி ஐ லவ் யூ” என ஜெயிலர் வசனங்களை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் முதல்நாள் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இதில் ரசிகர்களுக்கும் நடிகர் ரஜினிக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.