தனுஷ் 51: நாயகி அறிவிப்பு!
நடிகர் தனுஷின் 51-வது திரைப்படத்தின் கதாநாயகியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷின் 51-வது திரைப்படத்தின் கதாநாயகியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
அடுத்து, தனது 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜெயிலர்: ரஜினி, நெல்சனை பாராட்டிய கமல்!
இதனைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தன் 51-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக படக்குழு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
மேலும், நாகர்ஜுனா, சாய் பல்லவி, ஆகியோர் நடிக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.