முகப்பு
செய்திகள்

பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரைந்த ராஜமௌலி!

’தி நியூயார்க்கர்’ பத்திரிகைக்கு இயக்குநர் ராஜமௌலி வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்துள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2023, 6:06 pm IST
பகிர்:

’தி நியூயார்க்கர்’ பத்திரிகைக்கு இயக்குநர் ராஜமௌலி வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்துள்ளார்.

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது.

நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

Advertisement

Advertisement

மேலும், இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 5 பாடல்களில் ஒன்றாக நாட்டுக் கூத்து பாடலும் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.

இந்நிலையில், ராஜமௌலி ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகைக்கு நீண்ட பேட்டியளித்துள்ளார். அதில், ’ஆர்ஆர்ஆர்' குறித்தும் சர்வதேச அங்கீகாரம் குறித்து விரிவாக கூறியிருக்கிறார். 

குறிப்பாக, தி நியூயார்க்கர் வாசகர்களுக்காக நீங்கள் பரிந்துரைக்கும் 5 முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் எவை? என்கிற கேள்விக்கு சங்கராபரணம், முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்), பண்டிட் குயின், பிளாக் ஃபரைடே, ஆடுகளம் உள்ளிட்ட படங்களை ராஜமௌலி பரிந்துரைத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்பட 6 தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments