நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன்.. 
செய்திகள்

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்துக் கோரி மனு!

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி இணை பிரிந்தனர்.

DIN

நடிகர் ஜெயம் ரவி மனைவியைப் பிரிய விவாகரத்துக் கோரி மனு அளித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தற்போது, ஜெயம் ரவி பிரதர், காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புக்கு இடையே குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்வார். இதன் புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி.

இதற்கிடையே சில மாதங்களாக, ஜெயம் ரவியும் - ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில், நேற்று (செப். 9) ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தது உறுதியானது.

தற்போது, நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம். இந்த வழக்கு அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT