பத்மாவத் படத்தின் போஸ்டர், ரன்வீர் சிங். 
செய்திகள்

மறுவெளியீடான பத்மாவத்..!அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் குறித்து பேசிய ரன்வீர் சிங்!

பத்மாவத் படத்தின் மறுவெளியீட்டில் கில்ஜி கதாபாத்திரம் குறித்து ரன்வீர் சிங் பேசியதாவது...

DIN

தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் 2018இல் பத்மாவத் (தமிழில் பத்மாவதி) படம் வெளியானது. தற்போது, இந்தப் படம் மறுவெளியீடாகியுள்ளது.

இந்தப் படத்தை பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு வட மாநிலங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பி அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தாமதமாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

பத்மாவத் போஸ்டர்.

கி.பி.1303ஆம் ஆண்டில் இருந்த ராணி பத்மாவதியின் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோன் சிறப்பாக நடித்திருந்தார்.

சித்தூர் ராணி பத்மினியின் அழகில் மயங்கிய அலாவுதீன் கில்ஜி, அவளைக் கவர நினைத்து சித்தூரின் மீது படையெடுத்து கோட்டையை முற்றுகை இட்ட நிலையில் ராணி பத்மினி, தனது அந்தப்புரத்துப் பெண்கள் அனைவருடனும் கில்ஜியின் கண் முன்னே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்வதுதான் கதை.

அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் அசத்தியிருந்தார். கடினமான ஒரு வரலாற்று கதாபாத்திரத்தை அதன் தீவிரத் தன்மைக் குறையாமல் நடிக்க கடினமாக உழைத்ததாகக் கூறியுள்ளார்.

கதைதான் எனக்கு புத்தகம்

ரன்வீர் சிங் கூறியதாவது:

நடிகரான நான் திரைக்கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும். திரைக்கதையை நான் பாடப்புத்தகமாக கருதுகிறேன். என்ன எழுதி இருக்கிறதோ அதில் இருந்துதான் நான் குறிப்புகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறேன்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், கில்ஜி கதாபாத்திரத்தில் நான் இன்னமும் தீவிரமான, உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தும்படி நடிக்க விரும்பினேன். இயக்குநர் பன்சாலி கில்ஜி கதாபாத்திரத்துக்காக என்னை சிறப்பாக வடிவமைத்தார் என்றார்.

கடைசியாக ரன்வீர் சிங் ‘சிங்கம் அகெய்ன்’ படத்தில் நடித்திருந்தார். இதற்கடுத்து துரந்தார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT