முகப்பு
செய்திகள்

லைகாவால் கேம் சேஞ்சருக்கு சிக்கல்?

கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டு சிக்கல் குறித்து..

Updated On : 6 ஜனவரி 2025, 1:58 pm IST
பகிர்:

லைகா தயாரிப்பு நிறுவனத்தால் கேம் சேஞ்சர் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் டிரைலர் காட்சிகளும் அதை உறுதிபடுத்தியுள்ளன.

முன்னதாக, இந்தியன் - 3 படத்தின் வெளியீட்டை முடிக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தம் ஆகக்கூடாது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

இந்தியன் - 2 படப்பிடிப்பு பாதியில் நின்றபோது, ஷங்கர் அன்னியன் படத்தின் ரீமேக் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, லைகா வழக்குத் தொடர்ந்து இந்தியன் - 2 படத்தை முடிக்க கோரிக்கை வைத்தது. இதனால், இந்தியன் - 2 படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்தியன் - 2 பெரிய வணிக தோல்வியை அடைந்ததால், இந்தியன் - 3 படத்தை சரியாகக் கொண்டுவர வேண்டும் என்கிற முடிவில் லைகா நிறுவனம் உள்ளது. இதற்கிடையே, ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கேம் சேஞ்சர் படத்தை தடையிட தயாரிப்பாளர் சங்கத்தில் லைகா முறையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், லைகாவால் கேம் சேஞ்சர் படத்திற்கு தடை (ரெட் கார்ட்) கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments