ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயணா படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் கிளாக்சிக் கதையாகக் கருதப்படும் ராமாயணத்தைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். அதன் முழுக்கதை மற்றும் கிளைக்கதைகள் திரைப்படங்களாகவும் சின்னத்திரை தொடர்களாகவும் உருவாகியிருக்கிறது.
ஆனால், பான் இந்திய சினிமா வணிகம், விஎஃப்எக்ஸ் வளர்ச்சிக்குப் பின் சரியான படங்கள் உருவாகவில்லை. பிரபாஸ் நடித்த ஆதி புருஷ் கடுமையான தோல்வியைச் சந்தித்திருந்தது.
தற்போது, இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படப்பிடிப்பு நிறைவு!
ranbir kapoor, sai pallavi, yash's ramayana movie glipse will out soon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.