குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் சாய் பல்லவி! வைரல் விடியோ!
நடிகை சாய் பல்லவி வெளியிட்ட விடியோ இணையத்தில் வைரல்.
நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை விடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சாய் பல்லவி, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு, மகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய காட்சிகளை விடியோவாக இன்ஸ்டாகிராம் பகிர்ந்து, தனது வாழ்வில் அவர்கள் இருப்பதால் அந்தப் பருவம் ’அழகானது’ என்று பதிவிட்டுள்ளார்.
அவர், தனது பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் சகோதரியுடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வெளியிட்டு, "என் டெலிலா! நீ இருக்கும்போதுதான் எனக்கு வசந்தம். எங்கள் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் மூலம் பிரபலமடைந்து, சினிமா பயணத்தை தொடங்கிய சாய் பல்லவி, 2015-ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான 'பிரேமம்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து, மாரி 2, பாவக் கதைகள், அமரன் மற்றும் தாண்டேல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது 'ரெளடி பேபி' பாடல், யூடியூபில் 100 கோடி பார்வைகளை எட்டிய முதல் தென்னிந்திய விடியோ பாடல் ஆகும்.
ஆமீர் கான் தயாரிப்பில் அவரது மகன் ஜுனைத் கானுடன் இணைந்து 'ஏக் தின்' என்ற திரைப்படத்திலும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் 'ராமாயணா' படத்திலும் சாய் பல்லவி, நடித்து வருகிறார்.