இந்திய சினிமா இதுவரை பார்க்காத ஒன்று... ராமாயணா படத்தைப் பாராட்டிய காஜல்!
ராமாயணா படத்தைப் பாராட்டிய காஜல் அகர்வால்...
நடிகை காஜல் அகர்வால் ராமாயணா படத்தைப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷும் நடித்து வருகின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோவில் மிகப் பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், கம்பீரமான ரன்பீர் தோற்றம், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால், “ராமாயணா திரைப்படம் இதுவரை இந்திய சினிமா பார்க்காத தரத்தில் உருவாகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகவே வித்தியாசமாகவும் புதுமையான அனுபவமாகவும் நடிகர்களுக்கு அமைந்தது. இதற்கு முன் இப்படியான அனுபவத்தை அடைந்ததில்லை.” எனக் கூறியுள்ளார்.