எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிருத்விராஜின் விலாயத் புத்தா!
பிருத்விராஜின் விலாயத் புத்தா திரைப்படம் குறித்து...
நடிகர் பிருத்விராஜின் விலாயத் புத்தா திரைப்படம் வணிக ரீதியாக ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது.
சந்தன மரக்கடத்தல்களை மையமாகக் கொண்டு பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு விலாயத் புத்தா என்கிற திரைப்படம் உருவானது.
இந்தப் படத்தில் நாயகனாக பிருத்விராஜும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Advertisement
Advertisement
எம்புரான் திரைப்படத்தை இயக்கிபின் பிருத்விராஜ் நாயகனாக நடித்த படமென்பதால் விலாயத் புத்தா மேல் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், படத்திற்குக் கிடைத்த கலவையான விமர்சனங்களால் இதன் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் வெளியான 4 நாள்களில் வெறும் ரூ. 4 கோடியை மட்டுமே வசூலித்திருப்பது அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
காரணம், பிருத்விராஜ் சலார், எம்புரான் போன்ற படங்களில் நடித்தும் அவருடைய முதல்நாள் வசூலில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. மேலும், ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான விலாயத் புத்தா இந்தாண்டு மலையாள சினிமாவின் பெரிய தோல்விப்படமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பிருத்விராஜ் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கும் வாரணாசி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜன நாயகன் இசை வெளியீட்டில் இணையும் பிரபலங்கள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.