குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் வாக்களித்தது குறித்து...
நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், சினிமா, சின்ன திரை பிரபலங்கள் உள்பட மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார். மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்திலும் இவர் நடித்திருந்தார்
கும் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அண்மையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.