இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
ஜன நாயகன் வெளியீடு குறித்து...
ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. பின், மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்களால் தொடர் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது.
பின், மொத்த ஜன நாயகன் படமும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியாகி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisement
தற்போது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதால் இனியாவது ஜன நாயகன் திரைக்கு வருமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அல்லது நாளை (ஏப். 25) ஜன நாயகனுக்கான மறுதணிக்கை செய்யப்பட்ட சென்சார் சான்றிதழைத் தணிக்கை வாரியம் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒப்படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சான்றிதழ் கிடைத்ததும் ஏப்ரல் வெளியீட்டிலேயே ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வருவார்கள் என்றே தெரிகிறது.