தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
சூரியின் 7-வது படத்தின் கதை குறித்து...
நடிகர் சூரி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
'கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
Advertisement
’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
தற்போது, தன் மூன்றாவது திரைப்படமாக சூரி - ரவிக்குமார் படத்தை தயாரிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் 2015-ல் சென்னையில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வெள்ளத்தால் பாதிக்குள்ளான விஷயம் ஒன்றை கையில் எடுத்து திரைக்கதை எழுதியுள்ளனாராம்.
இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பில் சூரி விரைவில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்டாடி படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஒரு சில நாள்கள் ஓய்வில் இருந்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்ப உள்ளாராம்.