பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!
பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் உடல்நிலையைக் குறித்து...
பிரபல பாலிவுட் இயக்குநரும், இசையமைப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலியின் உடல்நிலைக்கு எந்தவொரு ஆபத்துமில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம்வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. கங்குபாய் கதியாவாடி, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் மொழிகளைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம்.
இந்த நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 24) அவரது 63 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
Advertisement
இதையடுத்து, அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வருத்தமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நலமாகவுள்ளதாகவும் சஞ்சய் லீலா பன்சாலியின் குடும்பத்தினர் புதன்கிழமையன்று விளக்கமளித்துள்ளனர்.