காந்தாரா சேப்டர் - 2 பணிகளில் ரிஷப் ஷெட்டி?
நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 2 பணிகளில் கவனம்...
நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 2 திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளாராம்.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 கடந்தாண்டு ஆக. 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.
பான் இந்திய வெளியீடான இது ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இதற்காக, இந்தியளவில் ரிஷப்புக்கு கவனம் கிடைத்தது. தற்போது, ஜெய் ஹனுமான், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காந்தாரா சேப்டர் - 2 திரைப்படத்தின் பணிகளை ரிஷப் ஷெட்டி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான எழுத்து பணிகளைத் தற்போது தொடங்கியுள்ளதாகவும் சேப்டர் - 1-யை விட மிகப் பிரம்மாண்டமாக இது உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Actor Rishab Shetty is reportedly busy with the work of directing the film Kantara: Chapter 2
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.