37 ஆண்டுகளுக்குப் பின் மறுவெளியீடு காணும் மோகன்லாலின் கிரீடம்!
கிரீடம் திரைப்படம் மறுவெளியீடு காண்கிறது...
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கிரீடம் மறுவெளியீடாகிறது. 2
இயக்குநர் சிபி மலையில் இயக்கத்தில் எழுத்தாளர் ஏகே லோகிததாஸ் எழுத்தில் உருவான திரைப்படம் கிரீடம். இதில், நாயகனாக நடிகர் மோகன்லால் நடித்திருந்தார். காவல்துறை அதிகாரியாக ஆசைப்படும் சேது மாதவனுக்கு (மோகன்லால்) அவரது தந்தை (நெடுமுடி வேணு) ஆதரவாக இருப்பார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் சேது பெரிய ரௌடியைக் கொல்ல, அவரது வாழ்க்கை மாறுகிறது.
இதன் தொடர்ச்சியான வெளியான செங்கோல் திரைப்படமும் பெரிய கவனத்தைப் பெற்றதுடன் மலையாள ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களாகவும் இவை மாறின.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 4கே தரத்தில் மேம்படுத்தப்பட்ட கிரீடம் திரைப்படம் வருகிற ஜூலை 10 ஆம் தேதி மறுவெளியீடாகிறது. 37 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்படம் திரைக்கு வருவதால் பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
The critically acclaimed film Keereetam, starring actor Mohanlal, is being re-released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.